Saturday, November 24, 2012

KINDS 21 அமைப்பின் இலவச செயலமர்வு


சம்மாந்துறை Kinds-21 Association அமைப்பின் ஏற்பாடடில் இலவச செயலமர்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப் பரிட்சையை எழுதவிருக்கும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வு இரண்டாவது நாளாக விஞ்ஞானப்பாடத்திற்காக இடம்பெற்றிருந்தது. 250-300 வரையிலான மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர். ஏற்கனவே ஆங்கில பாடத்திற்கு நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 27ம் திகதி அமைப்பினரால் அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் கணித பாடத்திற்கும் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

முர்சி முக்கிய தீர்மானம்

வியாழன் இரவு ஜனாதிபதி முர்ஸியின் பேச்சாளரின் அறிவிப்புக்களை அடுத்து எகிப்து அரசியல் களம் அதிர்ந்து போயுள்ளது. காஸா தாக்குதல்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட சூடு  தணிவதற்கு முன்னாலே முர்ஸியின் இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முபாரக் கால அதிகாரிகளை களை எடுக்கும் ஒர் நகர்வாகவே நேற்றைய தீர்மானங்கள் நோக்கப்படுகின்றது.
முர்ஸியினால் நேற்று அரசியல் யாப்புக்கு சேர்க்கப்பட்ட விடயங்கள், 2011 ஆம் ஆண்டு புரட்சியினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றது. முர்ஸியின் இந்த அறிவிப்பினைத் தொடரந்து தஹ்ரிரில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் தமது ஆதரவுக் குரல்களை எழுப்பினர்.
 முர்ஸியினால் நேற்று அறிவிக்கப்பட்ட யாப்புக்கான முக்கிய சேர்க்கைகளாவன 
1. ஜனாதிபதியினால் அறிவிக்கப்படுகின்ற அறிவிப்புக்கள், சட்டங்கள் மற்றும் யாப்புக்கான சேர்க்கைகள் அனைத்தும் நீதித்துறை உட்பட எந்த ஒரு அதிகாரத்தினாலும் செயலிழக்கச் செய்யவோ தாக்கல் செய்யவோ முடியாது.
2. எகிப்துக்கான யாப்பு வரைஞர் குழு மற்றும் பாரளுமன்ற உயர் சபையான ஸூரா சபை என்பன நீதித்துறை உட்பட எந்த ஒரு அதிகாரத்தினாலும் செயலிழக்கச் செய்யவோ களைக்கப்படவோ முடியாது. மேலும், யாப்பு வரைவுக்கான காலவரையறை இரண்டு மாதங்களினால் நீடிக்கப்படுவதுடன் யாப்பு ஆவணப்படுத்தலுக்கான காலம் 8 மாதங்களாக நீடிக்கப்படுகிறது.
3. ஜனவரி 25 தொடக்கம் புரட்சியில் ஈடுபட்டோரை கொலை செய்தல், அவர்களை காயப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டோருக்கான சட்டத்தீர்ப்புக்களை மீள்தீர்ப்புக்கு உட்படுத்தல். மற்றும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து அரச அதிகாரிகளையும் ஓய்வு பெறச்செய்தல்.
4. சட்ட  மா அதிபர் அப்துல் மவ்ஜீத் மஹ்முத் ஓய்வுக்கு உட்படுவதுடன் அவரது பதவிக்கு தளத் இப்றாஹீம் நியமிக்கப்படுகிறார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.