Friday, November 30, 2012

துருக்கியின் மறுமலர்ச்சி

துருக்கி மார்க்கம் போதிக்கும் பாடசாலைகளில் ஹிஜாப் தடையை நீக்கியுள்ளது. இந்த முன்னெடுப்பானது அங்குள்ள மதச்சாரபற்ற சக்திகளின் விமர்சனங்களைத் துண்டியுள்ளதுடன், துருக்கி அரசாங்கம் ஒர் இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலை நோக்கி நகர்வதற்கான சிறந்த சாட்சி இதுவேனவும் கூறியுள்ளன. 
துருக்கிய அரசியல் களத்தில் கல்வித்துறையானது. ஒரு முக்கிய மோதல் தளமாகக் கருதப்படுகின்றது. ஏ.கே.பி கட்சியின் பிரதம மந்திரி ரஜப் தையிப் அர்துகானின் முக்கிய ஆதரவாலர்களாக இருப்போரும், கபடமாக இஸ்லாமிய பெறுமானங்களை நுழைவிப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தும் மதச்சார்பற்றவாதிகளும் இத்தனத்தின் மீதே மோதிக்கொள்கின்றனர்.
மதச்சார்பற்ற சக்திகளுக்கு தீ மீது எண்ணெய் ஊற்றும் நிகழ்வாக இருந்தது, இவ்வருடம் அர்துகான் தமது முக்கிய இலக்காக குறிப்பிட்ட ஆன்மீக பக்குவமுடைய இளைஞர்களை உருவாக்குவது
என்பதாகும். மட்டுமன்றி கடந்த தசாப்தம் முழுவதிலும் ஏ.கே.பி அரசாங்கம் கல்வித்திட்டத்தில் செய்து வந்த மாற்றங்கள், மார்க்கப் பாடசாலைகளது பங்கினை மேலும் வலுவூட்டியிருந்தன. மேலும், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட மாற்றங்களுக்கு அமைய 2013-2014 ஆம் ஆண்டுகளில் அமுலில் வரும் வகையில் சாதாரண பாடசாலைகளிலும் அல்குர்ஆன் பாடங்களுக்கு ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள் பற்றி அர்துகான் மட்ரிடில் நடைபெற்ற ஒர் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிடும் போது நாம் அனைவருக்கும் அவரகளது விருப்புக்கு, அவர்களது பண்பாட்டுக்கு ஏற்ப தமது பிள்ளைகளை அணிவிக்க இடமளிப்போம். இவை அனைத்தும் பொது வேண்டுதலின் விளைவாக எடுக்கப்பட்ட படிப்படியான மாற்றங்களாகும்.
துருக்கிய சாதாரண வாழ்க்கையிலும் இந்த மார்க்க சார்பான நிலைப்பாடுகளுக்கும் மதச்சார்பற்ற நிலைப்பாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகளைக் காணமுடியும். 1923 ஆம் ஆண்டு முதல் தம்மை மதச்சார்பின்மையின் பாதுகாவளர்களாக சுய நியமனம் செய்து கொண்ட இராணுவத்தை அவரகளது அதிகாரங்களிலிருந்து குறைப்புக்களைச் செய்ததெல்லாம் இந்த அர்துகானின் கடந்த தசாப்த ஆட்சியாகும். இதை இஸ்லாமிய வேர் கொண்டதாக மதச்சார்பற்ற சக்திகள் வர்ணித்த போதும், அதை அர்துகான் அரசு மறுத்தே வந்துள்ளது.
இந்நிலையிலே அண்மைக்காலம் வரை இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறமுடியும் என்று நினைக்கக் கூட முடியாத, ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் பாரியார்கள் ஹிஜாபுடன் சமூகமளித்திருக்க இராணுவ தளபதிகள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி மாளிகையி்ல் நடைபெற்றது.
இதேவேளை கம்ஹீரியாத்என்ற மதச்சார்பற்ற பத்திரிகை இதனை கல்வியை இஸ்லாமியமயப்படுத்தலுக்கான முதற்படியே இது எனக் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீனுக்கு அங்கீகாரம்

இஸ்ரேலின்  தாக்குதல்களுக்கு இலக்காகிவரும் பலஸ்தீனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகள் வாக்களித்துள்ளன மற்றும்  எதிராக ஒன்பது நாடுகளும் வாக்களித் துள்ளன.ஆனால் இந்த வாக்கெடுப்பில் 41 நாடுகள் பங்கேற்கவில்லை.
இதன்படி உறுப்புரிமையில்லா கண்காணிப்பாளர் நாடாக பலஸ்தீனை ஐ.நா.சபை அங்கீகரிப்பதற்கு அதன் பொதுச் சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது தனி நாடு கோரும் பலஸ்தீனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கருதப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பு முடிவு மூலம் இரு நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக பலஸ்தீனத் தலைவர் மொஹமட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வாக்கெடுப்பானது சமாதான முனைப்புக்களைப் பின்னடையச் செய்யும் என இஸ்ரேல் பிரதிநிதி கூறியுள்ளார்.
பலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் ரமல்லா நகரில் பாரியளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கிரக ஒழுங்கு- அரிய நிகழ்வு

எதிரவரும் டிசம்பர் 3ம் திகதி 3 கிரகங்கள் நேர்கோட்டில் வரவுள்ளன.
சில இணையத்தளங்களின் தகவல்களின் படி 2737 வருடங்களுக்கொருமுறை நிகழும் இவ்வரிய நிகழ்வு எகிப்தின் மர்மப் பெட்டகமான கீஸா பிரமிடுகளின் மேல் வானிலே 3 கிரகங்களும் வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சனி, வெள்ளி, புதன் கிரகங்களே இவ்வாறு அமையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.