மதக் குரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வன்முறைகளை தூண்டும் வண்ணம் செயற்பட வேண்டாம் என பொதுபலா சேனா அமைப்பிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுபான்மை முஸ்லிம் மதத்தவர்களை இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த அமைப்பிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.
பௌத்த மதத்தை வலுப்படுத்துவதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அது ஏனைய மதங்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது என அவா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமது பெயரைப் பயன்படுத்தி சில அமைப்புக்கள் மதக் குரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
adaderana.lk
No comments:
Post a Comment