சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல் ஹாஜ் A.M.M.NOWSHAD அவர்களின் வேண்டுதலின் பேரில் 2013 ஆம் வருடத்தை வரவேர்கும் முகமாக சம்மந்துறை பிரதேச சபை ஒழுங்கு செய்த நிகழ்வு 2013.01.01 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் தேசிய கொடி ஏற்றுதலுடன் பிரதேச சபையின் செயலாளர் ஜனாப் A.A.SALEEM அவர்களின் தலைமையில் பிரதேச சபை முன்றலிடம் இடம் பெற்றது. இந்னிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச சபையின் உப தவிசாளர் ஜனாப் A.KALILUL RAHMAN அவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜனாப் A.L.M.MUSTHAFA உட்பட ஏனைய ஊழியர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் ஊழியர்கள் அனைவரும் 2013 ஆம் வருடத்திற்கான அரச சேவையின் உறுதி மொழியும் சத்திய பிரமாணமும் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.